குட்கா ஊழல் விவகாரம்: விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3-வது நாளாக விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். #Gutkha #GutkhaScam
குட்கா ஊழல் விவகாரம்: விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் 3-வது நாளாக விசாரணை
Published on

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் 3 அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடமும் விசாரணை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பினார்கள்.

ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே 3-வது முறையாக சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து 8-ந்தேதியும் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். மீண்டும் 11-ந்தேதி ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி இருந்தனர். அதன்படி இன்று 3-வது நாளாக சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com