

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் 3 அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடமும் விசாரணை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பினார்கள்.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே 3-வது முறையாக சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து 8-ந்தேதியும் சரவணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். மீண்டும் 11-ந்தேதி ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி இருந்தனர். அதன்படி இன்று 3-வது நாளாக சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.