கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளோடு பள்ளத்தில் விழுந்தவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளோடு பள்ளத்தில் விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளோடு பள்ளத்தில் விழுந்தவர் பலி
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பண்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் காட்டையன் (வயது 43). சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற் சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு, அவர் வேலை முடிந்து கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காட்டையன் வந்தார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பண்பாக்கம் நோக்கி அவர் புறப்பட்டுச்சென்றார்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து தச்சூர் வரை சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடை பெறுவதால் ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன

இந்த நிலையில், கவரைப்பேட்டை பழைய போலீஸ் நிலைய கட்டிடம் எதிரே மேம்பால பணி நடைபெறும் இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

அந்த சாலையில் காட்டையன் வந்த போது தடுப்பு இல்லாததால் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற பள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் இன்று அதிகாலை வரை காட்டையன் பலியாகி கிடப்பதை யாரும் கவனிக்க வில்லை. காலையில் விடிந்ததும் அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்கு காரணமான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் மீது கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வாகன போக்குவரத்தை மாற்றுவழியில் செல்லும் பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் அறிவுறுத்தும் வகையில் எந்தவித தடுப்போ அல்லது முறையான அறிவிப்பு பலகையோ அப்பகுதிகளில் வைக்கப்படுவது இல்லை. 

இதனால் இந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com