

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு விஸ்வாமித்திரி ரெயில் நிலையம் அருகே உள்ள தேவிபுரா பகுதியின் காவல்துறை துணை ஆய்வாளர் கோவிந்த் சாவ்தா கழுத்தளவு தண்ணீரில் இறங்கி ஒன்றரை மாத குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றினார்.
பின்னர் குழந்தையை அந்த கூடையினுள் வைத்து அதை என் தலையில் சுமந்து கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தேன். குழந்தையின் தாயும் பத்திரமாக மீட்கப்பட்டார்” என்று அவர் கூறினார்.