கிண்டி கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவர் கைது

கிண்டி கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆலந்தூர்:

திண்டுக்கல்லை சேர்ந்தவர் முகமது சாகிப். கால்டாக்சி டிரைவர். இவர் கிண்டியில் தங்கி தனியார் கால்டாக்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காரை ஓட்டி வந்தார்.

கடந்த சில நாட்களுகு முன்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல பயணி ஒருவர் காரை முன் பதிவு செய்தபோது அதனை டிரைவர் முகமது சாகிப் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முகமது சாகிப்பை கால்டாக்சி நிர்வாகத்தினர் அழைத்து விசாரித்தனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதுபற்றி முகமது சாகிப் கிண்டி போலீசில் புகார் செய்தார். இதேபோல் கால்டாக்சி நிர்வாகத்தினரும், முகமது சாகிப் மீது புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு டிரைவர் முகமது சாகிப் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு வந்தார். திடீரென அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து தடுத்தனர். பின்னர் முகமது சாகிப்பை மீட்டு கிண்டி போலீசாரிடம் புகார் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே கவர்னர் மாளிகை முன்பு தற்கொலைக்கு முயன்ற முகமது சாகிப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com