கூடுவாஞ்சேரி அருகே 68 குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு

கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர், நீலமங்கலம், அம்மணம்பாக்கம், ஆரம்பாக்கம், ஆதனூர், மாடம்பாக்கம் போன்ற பகுதியில் வசிக்கும் 68 குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வண்டலூர்:

கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர், நீலமங்கலம், அம்மணம்பாக்கம், ஆரம்பாக்கம், ஆதனூர், மாடம்பாக்கம் போன்ற பகுதியில் வசிக்கும் 68 குடும்பத்தினர் நீண்ட காலமாக ரேஷன் கார்டு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், 68 குடும்பத்தினருக்கு புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 68 குடும்பத்தினருக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தர், படப்பை, மணிமங்கலம் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் என்.டி.சுந்தர் ஆகியோர் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார்கள். அப்போது நீலமங்கலம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com