கூடலூர், மசினகுடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூர், மசினகுடியில் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கூடலூர்:

கொரோனாவால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், சிவப்பு மண்டலங்களில் 33 சதவீத அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு வர உத்தரவிட வேண்டும், இலவச முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மசினகுடியில் சிங்காரா மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் கண்ணன், ராமகிருஷ்ணன், சாலி உள்பட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com