சரவணம்பட்டி அருகே ரெயில் மோதி காவலாளி பலி

சரவணம்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காவலாளி மீது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.
சரவணம்பட்டி அருகே ரெயில் மோதி காவலாளி பலி
Published on

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தத்தை சேர்ந்தவர் சூர்யநாராயணன (வயது 61). காவலாளி. இன்று காலை இவர் பட்டேல் ரோடு அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சூர்ய நாராயணன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்ய நாராயணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com