புதுக்கோட்டையில் ஜி.எஸ்.டி. மசோதாவை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 18 சதவிகித வரிவிதிப்பு செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் ஜிஎஸ்டி மசோதாவைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டையில் ஜி.எஸ்.டி. மசோதாவை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுக்கோட்டை:

மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 18 சதவிகித வரிவிதிப்பு செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் ஜிஎஸ்டி மசோதாவைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் எம்.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் சண்முகராஜா மற்றும் நிர்வாகிகள் அமுதன், ஞானசேகரன், சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலளார் சலோமி ஆகியோர் பேசினர். முடிவில் கிரிஜா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com