

இதனால் கேரளாவில் உள்ள வயநாட்டின் புத்துமலா, மலப்புரத்தில் உள்ள கவலப்பாரா ஆகிய இரண்டு இடங்களில் மிக அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ஏரராளமானோர் உயிரிரோடு புதைந்தனர். அவர்களை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது. மலையில் இருந்து சரிந்த மண் வீடுகளை அடியோடு விழுங்கியதாலும், மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் உடல்கள் எங்கு புதைந்திருக்கின்றன என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீட்புப்பணியில் தற்போது மண்ணுக்குள் ஊடுருவி உடல்களை அடையாளம் காணும் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை சேர்ந்த வல்லுநர்கள் ஜிபிஆர் உதவியிடன் இரண்டு கிராமத்திலும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.