துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல்
Published on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து  தூத்துக்குடி ஆலையை மூட அரசாணை வெளியிட்டப்பட்டது. அரசியல் காரணங்களினாலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com