பொம்மிடி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

பொம்மிடி அருகே அரசு பஸ் மீது கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
பொம்மிடி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

தருமபுரி:

திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ரூபன் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு பொம்மிடி அடுத்த எ.பள்ளிப்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.

அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் இது குறித்து டிரைவர் ரூபன் எ.பள்ளிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com