கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் ஊழியர் வீட்டில் ரூ.3 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளை

கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் ஊழியர் வீட்டில் ரூ.3 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் ஊழியர் வீட்டில் ரூ.3 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளை
Published on

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). அரசு போக்குவரத்து கழகக்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சுமதி(40), மகன் கதிர்வேல் (21) மட்டும் இருந்தனர். இரவு இருவரும் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு தூங்கினர்.

இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக சென்று ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கினர். பின்னர் பீரோவைத்திறந்து அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து தூங்கி கொண்டிருந்த சுமதி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து விழித்தெழுந்த சுமதி சத்தம் போடவே, கதிர்வேல் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 12 லட்சம் இருக்கும்.

இந்த சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி ஆதனக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னர் மன்னன், சப்- இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com