மதுரையில் அரசு பஸ் மோதி வக்கீல் உயிரிழப்பு

மதுரையில் அரசு பஸ் மோதியதில் வக்கீல் உயிரிழந்த சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் அரசு பஸ் மோதி வக்கீல் உயிரிழப்பு
Published on

மதுரை:

மதுரை விளாங்குடி, நேரு நகர், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 52). வக்கீலான இவர் மதுரை மாவட்ட கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜானகி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.

நேற்று இரவு ஜெயசங்கர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூலக்கரை தியாகராஜர் மில் காலனி முன்பு வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயசங்கரை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசங்கர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com