மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ராஜீவ் காந்தி விருது

மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ‘ராஜீவ் காந்தி சத்பவனா’ விருதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கினார். #GopalkrishnaGandhi #RajivSadbhavnaAward
மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்திக்கு ராஜீவ் காந்தி விருது
Published on

புதுடெல்லி:

அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ‘ராஜீவ் காந்தி சத்பவனா’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016-2017-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, நேற்று டெல்லி ஜவகர் பவனில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விருது கமிட்டியின் தலைவர் கரன்சிங் ஆகியோர் கோபாலகிருஷ்ண காந்திக்கு விருது வழங்கினர்.

இது, பாராட்டு பத்திரமும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் கொண்டது ஆகும். #GopalkrishnaGandhi #RajivSadbhavnaAward  #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com