

தன்பாலின உறவு இந்தியாவில் குற்றமில்லை என கடந்தாண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் தன்பாலின உறவுக்கு அனுமதி கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் இது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் தன்பாலின உறவுக்கு அனுமதி அளித்துள்ளன. இருப்பினும் 167 நாடுகளில் இது குற்றமாகவே கருதப்படுகிறது.
தன்பாலின உறவு வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் 50 ஆண்டுகாலமாக தன்பாலின சேர்க்கை சமூகம் கடந்து வந்த பாதையும், போராட்டங்களையும் விவரிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தந்து முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.