உத்தரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு வளர்ச்சி திட்டம் கடந்த சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.1,500 கோடியில் நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தற்போதைய மாநில பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.