ஆட்டோவில் தவற விட்ட 10 பவுன் நகை மீட்பு

திருவண்ணாமலையில் ஆட்டோவில் தவற விட்ட 10 பவுன் நகையை மீட்ட போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நகை மீட்பு
நகை மீட்பு
Published on

திருவண்ணாமலை:

சென்னை மூலக்கரை சேர்ந்தவர் ரேவதி (வயது 32). இவர், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாநகருக்கு ஆட்டோவில் சென்றார். அப்போது ரேவதி தன் கையில் வைத்திருந்த பையை அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் வைத்தார்.

வீட்டுக்கு சென்ற பின்னர் பையை ஆட்டோவில் தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது. அதில் 10 பவுன் நகைகள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆட்டோவை பல இடங்களில் தேடி பார்த்தார். எனினும் ஆட்டோவை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து ரேவதி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர், ஏட்டு குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், ரேவதி பயணம் செய்த ஆட்டோ சலீம் என்பவர் ஓட்டியது தெரியவந்தது. சலீமிடம் போலீசார் விசாரணை செய்ததில் பையை, ரேவதி தவறவிட்டது அவருக்கு தெரியவில்லை. நகைப்பை ஆட்டோ இருக்கைக்கு பின் இருந்ததை சலீம் மற்றும் போலீசார் பார்த்தனர்.

அதைத் தொடர்ந்து பையை போலீசார் எடுத்து அதில் இருந்த நகையை மீட்டு ரேவதியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசாருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் ரேவதி நன்றி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com