கோபி அருகே விபத்து: 2 பேர் பலி

கோபி அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

கோபி:

பெருந்துறையை அடுத்த பச்சாக் கவுண்டன் பாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன் (21). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வண்டியை ராமசாமி ஓட்ட பின்னால் திவாகரன் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.

கிரேநகர் - விஜயமங்கலம் ரோடு, கோடாபுலியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராமசாமி, திவாகரன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவருக்கும் தலை, கால்களில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com