கோபி அருகே கார் மோதி முதியவர் பலி

கோபி அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

கோபி:

கோபி வேலுமணி நகரை சேர்ந்தவர் ஏசுராஜன் (வயது 75). ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இவர் இன்று காலையில் பால் வாங்குவதற்காக சைக்கிளில் சென்றார். வேலுமணி நகர் பிரிவு ஈரோடு - சத்தி ரோட்டை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஏசுராஜன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com