கோவா முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது

சமீபத்தில் காலமான கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கோவா முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது
Published on

பனாஜி:

கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்ததால் பாராளுமன்ற தேர்தலுடன் அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலில் நடந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியான நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குளை பெற்று தோல்வியை தழுவினார்.

இந்த தோல்வியின் மூலம் சுமார் 25 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பனாஜி தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் பனாஜி தொகுதியை பறிகொடுத்ததற்காக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com