ஆயிரம் ரூபாய் கேட்டால் ஐந்து மடங்கு அதிகம் கொடுத்த ஏ.டி.எம்மை முற்றுகையிட்ட மக்கள்

கேட்டதை விட ஐந்து மடங்கு அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம்.மை பொதுமக்கள் முற்றுகையிட போலீசாருக்கு விஷயம் தெரிந்து வருவதற்குள் 2 லட்சம் ரூபாய் காலியாகியுள்ளது.
ஆயிரம் ரூபாய் கேட்டால் ஐந்து மடங்கு அதிகம் கொடுத்த ஏ.டி.எம்மை முற்றுகையிட்ட மக்கள்
Published on

ஜெய்ப்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் என்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சிறிது அதிர்ச்சியடைந்தாலும் அவர் தனது நண்பர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அப்பகுதியில் இந்த செய்தி பரவ அனைவரும் ஏ.டி.எம் கார்டுடன் ஏ.டி.எம்.மை முற்றுகையிட்டனர். ஆயிரம் கேட்டவருக்கு 5 ஆயிரம், 4 ஆயிரம் கேட்டவருக்கு 20 ஆயிரம் என ஐந்து மடங்கு அதிகமாக பணத்தை அள்ளி கொடுத்துள்ளது இயந்திரம்.

தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதற்குள்ளாக இயந்திரத்தில் இருந்த 2 லட்சம் ரூபாயும் காலியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். அறையை பூட்டினர். சாப்ட்வேர் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. சிசிடிவி மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்டு தகவல்களை அடிப்படையாக கொண்டு யார் பணம் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com