திருக்கனூர் ஜவுளிக்கடையில் சிறுமியிடம் சில்மிஷம்- தையல் தொழிலாளி கைது

திருக்கனூர் ஜவுளிக்கடையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தையல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 55), தையல் தொழிலாளி. இவர் திருக்கனூர் கடைவீதியில் தமிழக பகுதியான சித்தலம்பட்டில் தையல் கடை வைத்துள்ளார். திருக்கனூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் துணி வாங்க வந்தார். அப்போது அந்த கடைக்கு 12 வயது சிறுமியும் அவரது தாயாரும் வந்திருந்தனர். கடையில் இருந்த கந்தன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்தார். பின்னர் அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com