சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே செம்மனார் கோவில் அடுத்த வள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கு என்ற சீனிவாசன் (வயது44). இவர் அருகில் உள்ள கிராமத்துக்கு செல்லும் போது 3-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமிக்கு சீனிவாசன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதனையடுத்து இந்த வழக்கு மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com