விருத்தாசலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை

விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

விருத்தாசலம்:

விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சிவசக்தி(வயது 16). வீட்டில் தனியாக இருந்த சிறுமி, திடீரென விஷத்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவசக்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com