அரியானா சபாநாயகராக கியான் சந்த் குப்தா தேர்வு

அரியானா மாநில சட்டசபையின் புதிய சபாநாயகராக கியான் சந்த் குப்தா இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சபாநாயகராக கியான் சந்த் குப்தா பதவியேற்ற காட்சி
சபாநாயகராக கியான் சந்த் குப்தா பதவியேற்ற காட்சி
Published on

90 இடங்களை கொண்ட அரியானா  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றியது.

ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.
 

10 இடங்களை கைப்பற்றிய தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், அரியானா சட்டசபை சபாநாயகராக கியான் சந்த் குப்தா-வின் பெயரை முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் இன்று முன்மொழிந்தார். இதை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா வழிமொழிந்த நிலையில் எதிர்ப்பு ஏதுமின்றி கியான் சந்த் குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com