தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்

தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 3 ராஜகோபால்நகர் 5வது மெயின் சாலை ரூ.27.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல அன்னை தெரசாநகர் 3வது தெருவில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்படுகிறது. மேலும் லூர்தம்மாள்புரம் மற்றும் வெற்றிவேல்புரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பம்ப்ரூம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

இந்த பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார். அப்போது மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் தொம்மை சேசுவடியான், வட்ட செயலாளர் தினகரன், கருப்பசாமி, ரவிசந்திரன், பொன்னுச்சாமி மற்றும் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிர்மல் மற்றும் தொ.மு.ச தலைவர் மரிய பிரான்சிஸ் ராமர், சம்சுதீன், மரிய அந்தோணி, ஜாண், ஜபார், சரவணன், ஜெயபிரகாஷ், சிலுவை சந்தியாகு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com