தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது
Published on

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் அணி அணியாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவனும் போராட்டத்தில் இறங்கினார். இதற்காக தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் இருந்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

தூத்துக்குடி 4-ம் கேட் குறிஞ்சிநகர் பகுதியில் வரும் போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com