இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும்- கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிவுரை

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதில் பேசிய கீதாஜீவன் எம்.எல்.ஏ. இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் அறிவுரை வழங்கினார்.
இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும்- கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிவுரை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. விழாவில் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். பின்னர் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன்பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

அப்போது கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசுகையில்,'' இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும். அதுவும் ஆன்மீக பணியில் ஈடுபடுவது நல்ல காரியம் கோவில் விழாவில் ஓற்றுமையுடன் அனைவரும் பணியாற்றி எதிர்வரும் காலத்தில் தி.மு.க.விற்கு துணை நிற்க வேண்டும்" என்றார். 

விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் நடராஜன், பிரதிநிதி மதியழகன், கோவில் தலைவர் முருகேசன், செயலாளர் அய்யாச்சாமி, பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சண்முகவேல்,கௌரவ ஆலோசகர் சண்முகசுந்தரம், வக்கீல் நாகராஜ், நிர்வாக கமிட்டியினர் வெற்றிவேல், முருகேசன், வேல்ராஜ், பாக்கியசெல்வன், முருகேஸ்வரன், மோகன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com