வாலிபால் விளையாடுவதில் கோஷ்டி மோதல்- 8 பேர் படுகாயம்

நெல்லிக்குப்பம் அருகே வாலிபால் விளையாடுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோதல்
மோதல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குணமங்கலம் சேர்ந்தவர் தேவதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.

இந்த நிலையில் தேவதாஸ் அணியினரும், தினேஷ்குமார் அணியினரும் அதே ஊரில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டது.

இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தில் இரு தரப்பினரும் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் மதியழகன், சிவசக்தி, அசோக்குமார், கந்தசாமி, லட்சுமி, ரவி, ஜனார்த்தனன், ராயர் ஆகிய 8 பேருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் குணமங்கலத்தை சேர்ந்த தேவதாஸ், ஜனார்த்தனன், பிரேம்குமார், மணிபாலன், அருண், ராயர், தினேஷ் குமார், மதியழகன், சிவசக்தி, ஹரிபாபு, அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com