ராகுல் வருகையால் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது- யோகி ஆதித்யநாத் கிண்டல்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவதால் பாஜகவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
Published on

மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியை ஆதரித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று யவத்மால் மாவட்டம் உமர்கெட் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி வந்துள்ளதாக அறிந்தேன். அவர் மகாராஷ்டிராவுக்கு வந்திருக்கிறார் என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகி விட்டது.
ராகுல் காந்தி எந்த கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரோ அந்த கட்சி தோல்வியை தான் சந்திக்கும். ராகுல் காந்தியின் வருகையால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் தோல்வி உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com