கந்தர்வக்கோட்டையில் அம்மா திட்ட முகாம்

கந்தர்வக்கோட்டையில் வருவாய்த் துறையின் சார்பில் சிறப்பு அம்மா திட்ட முகாம் கந்தர்வக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டையில் அம்மா திட்ட முகாம்
Published on

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் வருவாய்த் துறையின் சார்பில் சிறப்பு அம்மா திட்டமுகாம் கந்தர்வக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல துணைவட்டாச்சியர் வரத.ராமசாமி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் செந்தில் முன்னிலை வகித்தார். 

முகாமில் முதியோர் உதவித் தொகை கேட்டு 23 மனுக்களும், வாரிசு சான்று கேட்டு 1 மனுவும், வீட்டு மனைப்பட்டா கேட்டு 2 மனுக்களும், இலவச தையல் இயந்திரம் கேட்டு 1 மனுவும், பட்டா வினை கிராம க்கணக்கில் போக்குவரத்து செய்யக் கோரி 1 மனுவும் பெறப்பட்டது. பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடி க்கை எடுக்க உத்தர விடப்பட்டது. 

முகாமில் வருவாய் அலுவலர் கலா, கிராம உதவியாளர்கள் செந்தில், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கிராம நிர்வாக அலுவலர் த.கருப்பையா நன்றி கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com