கஜா புயலால் காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கஜா புயல் காரணமாக காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
கஜா புயலால் காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
Published on

காஞ்சீபுரம்:

‘கஜா’ புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது.

இதேபோல் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.

காஞ்சீபுரத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததாலும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மேட்டுத்தெரு, விளக்கடி கோவில் தெரு பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதி அடைந்தனர்.

பஸ் நிலையம், கங்கை கொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து காணப்படுகிறது.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஆர்.கே.பேட்டை - 5

பொன்னேரி அரசு ஆஸ்பத் திரி முன்பு பாய்ந்த மழைநீர் வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி நின்றது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

புறநோயாளிகள் மழை நீருக்குள் நின்று கொண்டு மருந்து சீட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்கு நோயாளியை கொண்டு செல்ல முடியாத நிலையும் உருவானது. சில நோயாளிகள் தண்ணீருக்குள் வழுக்கி விழுந்தனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறும் போது, ‘‘கடந்த மாதம் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி நின்றது மருத்துவ மனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் சீர் செய்யபடவில்லை. நேற்று பெய்த மழையில் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாத படி தண்ணீர் தேங்கிவிட்டது. இதனால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஆஸ்பத்திரி முன்பு மழை நீர் தேங்காதபடி பேருராட்சி மற்றும் சுகாதார துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com