பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவாரா? டெல்போட்ரோவுடன் இன்று மோதல்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலும் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவாரா? டெல்போட்ரோவுடன் இன்று மோதல்
Published on

பாரீஸ்:

கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அர்ஜென்டினாவின் ஸ்வார்ஸ்யினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான நடால் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார். நடப்பு சாம்பியனாக அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தும் ரபேல் நடாலுக்கு டெல்போட்ரோ கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

மற்றொரு அரை இறுதியில் டொமினிக் திம் (ஆஸ்திரியா)- மார்கோ செச்சினட்டோ (இத்தாலி) மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீராங்கனை ஹால்ப் (ருமேனியா)- ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகின்றனர். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com