செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார்

7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். #FrenchOpen
செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார்
Published on

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது.

இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினார்.

செம்மண் கோர்ட் ராஜாவான நடாலின் ஆட்டத்திற்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ருசித்தார். #FrenchOpen2018 #Nadalvsthiem

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com