ராயக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

ராயக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ராயக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு வாந்தி, மயக்கம்
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி ராயக்கோட்டையை அடுத்த கொப்பகரை அருகே உள்ள பால்னம்பட்டி கெங்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி சீதா (40). இவர்களுக்கு ரஞ்சிதா (23) என்ற மகளும், ரமேஷ் (21) என்ற மகனும் உள்ளனர்.

வெங்கட்ராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே ஒரு குடிசை வீட்டை கட்டி அதில் சமையல் செய்து வந்தனர். நேற்று சீதா அந்த குடிசை வீட்டில் புளிசாதம் சமைத்தார். பின்னர் அந்த சாதத்தை இரவு 4 பேரும் சாப்பிட்டனர். 

சிறிது 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீதா புளிசாதம் செய்தபோது பல்லி விழுந்ததாகவும், அதனை அவர்கள் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com