தஞ்சையில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேர் கைது

முன்விரோத தகராறில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சையில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் அரவிந்த் (வயது 27). தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று அரவிந்த் வழக்கம் போல் வியாபாரம் செய்வதற்காக மார்க்கெட்டிற்கு வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மாகாலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் தஞ்சை வடக்கு அலங்கம் கொடிமரத்து மூலை பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 22) என்பவரின் உறவினர்களுக்கும், அரவிந்த் உறவினருக்கும் இடையே ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சணை இருந்து வந்தது. இதுநாளடையில் தகராறாக மாறி இவர்களுக்கு இடையில் முன்விரோம் இருந்து வந்தது. இதன்காரணமாக ராகுல் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணன் (25). அமீன் (24), மற்றும் ஜெயசூரியன் (23) ஆகியோரின் உதவியுடன் அரவிந்தை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com