

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.