பனையூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை - 4 பேர் கைது

பனையூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனையூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை - 4 பேர் கைது
Published on

சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூர் அடுத்த ஈசிஆர் சாலை பனையூர் நைனார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா தொழிலதிபர்.

இவர் கடந்த 27-ந்தேதி சென்னையில் உள்ள வங்கிக்கு காரில் சென்று ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

காரை வீட்டின் எதிரே உள்ள காலி மைதானத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் காரில் இருந்த பணத்தை எடுக்காமல் மறந்து வந்ததை உணர்ந்த பாத்திமா பணத்தை எடுக்க சென்றார். அப்போது கார் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ. 25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது

அதிர்ச்சி அடைந்த பாத்திமா கானாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அன்று பாத்திமாவின் எதிர்வீட்டில் காவலாளியின் மருமகன் சிரஞ்சீவியை விசாரித்தபோது கூட்டாளிகளுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரது கூட்டாளிகளான பாண்டிச்சேரி சூனாம்பேடு பகுதியை சேர்ந்த முத்து, குமார், வேலு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com