கருப்பு பணம் தடுப்பு வழக்கு- நளினி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு குற்றப்பத்திரிகை நகல்

வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. #NaliniChidambaram #Srinidhi
கருப்பு பணம் தடுப்பு வழக்கு- நளினி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு குற்றப்பத்திரிகை நகல்
Published on

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது கருப்புப்பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com