மாண்டியாவில் இது முதல் முறை- தேசிய கட்சி வேட்பாளர்கள் களத்தில் இல்லை

கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற உள்ளது. #LokSabhaElections2019 #Mandya
மாண்டியாவில் இது முதல் முறை- தேசிய கட்சி வேட்பாளர்கள் களத்தில் இல்லை
Published on

பாராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள், பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. மாண்டியா உள்ளிட்ட 7 தொகுதிகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இதில் மாண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து நடிகர் அம்பரீசின் மனைவி நடிகை சுமலதா சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. இதனால் பாஜக தனியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. கர்நாடகாவில் வாக்கு வங்கி இல்லாத பகுஜன் சமாஜ் கட்சியும் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இதன்மூலம், இரண்டு பிரதான தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் இங்கு போட்டியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com