கோத்தகிரி நேரு பூங்காவில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகின

கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகின.
கோத்தகிரி நேரு பூங்காவில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகி இருப்பதை காணலாம்
கோத்தகிரி நேரு பூங்காவில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகி இருப்பதை காணலாம்
Published on

கோத்தகிரி:

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில் பார்த்து ரசிக்க பல இடங்கள் உள்ளன. தற்போது கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், இங்குள்ள சுற்றுலா மையங்களுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இங்கு அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனூர் கோவில் ஆகியவை உள்ளன.

கோடைவிழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடத்த கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பூங்காவை தயார் செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் இந்த பூங்கா மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை.

அங்குள்ள ஊழியர்கள் பூங்காவில் இருக்கும் செடிகளை பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் பூங்காவில் இருந்த செடிகளில் பலவித வண்ணமான பூக்கள் பூத்து குலுங்கின. அதை பார்க்கவே அழகாக இருந்தது.

இதற்கிடையே, கடந்த ஒரு வார காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் பூங்காவில் பூத்து குலுங்கிய பூக்கள் கருகி வருகின்றன.

இதைத்தொடர்ந்து கருகிய பூக்களை செடிகளுடன் அகற்றி மீண்டும் அங்கு புதிய மலர் நாற்றுக்களை நடும் பணி நடந்து வருகிறது. அதுபோன்று புல் தரைகளில் அதிகமாக வளர்ந்துள்ள புற்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்றும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com