தென்ஆப்பிரிக்கா - நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் பலி

தென்ஆப்பிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoalMineBlast
தென்ஆப்பிரிக்கா - நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் பலி
Published on

ஜோகனஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்காவின் முமாலங்கா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் உள்ள செப்பு கம்பிகளை திருடுவதற்கு 20 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் நுழைந்தது.

அப்போது திடீரென கியாஸ் வெடித்தது. இதில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் 5 பேர் சடலங்களை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.#CoalMineBlast

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com