கிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது

கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதிகளில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பணம் கேட்டு மிரட்டிய மூர்த்தி மற்றும் உடனிருந்த குணா, பார்த்திபன், கார்த்திக், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

மூர்த்தி என்பவர் மீது கடந்த சில வருடங்களாக பல்வேறு புகார்கள் வாய் மொழியாக வந்த நிலையில் இன்று எழுத்துப் பூர்வமாக புகார் வந்ததையெடுத்து சி.சி.டி.வி. ஆதாரங்களுடன் கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர். 

கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com