மயிலாடுதுறையில் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து

மயிலாடுதுறையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து
Published on

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை விசித்திராயர் தெருவில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு மேலாளர் முல்லைநாதன் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவுக்காவலர் துரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இரவு 9.30 மணி அளவில் திடீரென்று மேலாளர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ பரவாமல் அணைத்தனர்.

மேலாளர் அறையிலிருந்த இன்வெர்ட்டரிலிருந்து தீப்பிடித்து வங்கி சர்வர் மற்றும் ஏசி எரிந்துள்ளது தெரியவந்தது. லாக்கரில் உள்ள வங்கி ஆவணங்கள், கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் எந்த சேதமும் இல்லாமல் தப்பியது. மேலும் சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com