தேவகோட்டை அருகே தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

தேவகோட்டை அருகே தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
தேவகோட்டை அருகே தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்
Published on

தேவகோட்டை:

தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் மக்கள்நல பணியாளராக வேலை பார்த்தவர் சுமதி (வயது35). இவரது கணவர் கண்ணன், கோவையில் ஓட்டல் தொழிலாளியாக உள்ளார்.

இதனால் சிறுமடை கிராமத்தில் கணவர் வீட்டாருடன் சுமதி வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள கோவிலை சுத்தம் செய்ய போவதாக சுமதி கூறி சென்றார்.

இந்த நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தீக் காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக சேர்ந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுமதி பரிதாபமாக இறந்தார். அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது எப்படி என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சுமதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com