குவாலியர் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. #GwaliorRailwayStation
குவாலியர் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து
Published on

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். கேண்டீன் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com