மீனம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் கடையில் தீ விபத்து- ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

சென்னை மீனம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
மீனம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் கடையில் தீ விபத்து- ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
Published on

சென்னை:

சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கின் உட்புறம் குளிர்பான கடை உள்ளது.

இந்த குளிர்பான கடையில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கடையில் உள்ள ஐஸ்பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக கடை தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம், கிண்டி மற்றும் தேனாம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வண்டியில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. பெட்ரோல் பங்குக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com