தீ விபத்து
தீ விபத்து

ஈரோட்டில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

ஈரோட்டில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
Published on

ஈரோடு:

ஈரோடு கே.கே.நகரில் உள்ள சுப்பிரமணிய நகரில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. அங்கு நேற்று இரவு 7 மணிஅளவில் ஊழியர்கள் சிப்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அடுப்பில் இருந்து பரவிய தீ அருகில் உள்ள சுவற்றில் படிந்து இருந்த எண்ணெய் மீது பற்றியது. மேலும், சிமெண்டாலான மேற்கூரையிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் போராடிய அவர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

X

Maalai Malar
www.maalaimalar.com