தன்னை சந்தித்து பேசியதாக விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley
தன்னை சந்தித்து பேசியதாக விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு
Published on

லண்டன்:

பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜய் மல்லையா கூற்று தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், பாராளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பாராளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். 

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com