அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று இறுதிகட்ட கவுன்சிலிங்

இணையதளத்தில், விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவைநேற்றே தேர்வு செய்திருக்க வேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.,) பல்வேறு படிப்புகளில் இணைய கடந்த மாதம் மாணவர் சேர்க்கை நடந்தது. 800க்கும் அதிகமானோர் இணையதளம் மூலம், நேரிலும் விண்ணப்பித்தனர்.கடந்த, 7, 8-ந்தேதிகளில், கவுன்சிலிங் நடந்தது. 550 பேர் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று 9-ந்தேதி இறுதி கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுவரை இணையாதவர் தங்களுக்கான படிப்பை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவை நேற்றே தேர்வு செய்திருக்க வேண்டும் என, திருப்பூர் ஐ.டி.ஐ., முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com